பெயரென்றும் இருப்பிடமென்றும்நகைப்புத் தோன்ற
கிளம்பி நெடுந்தூரம் வந்தாயிற்று
யாரொருவரும் கலைத்துப் போடலாமென
வழி தவறிய நாயைப் போல கடந்த பாதையில்
அடையாளம் எதையும் உண்டாக்கவில்லை
புராணக் கதையின் சிறுமியாய்
மணியாரத்தின் முத்துகளை
வழிநெடுகச்சிதறி விட தேவதைகளின்
உபயமும் எனக்கில்லை
தொலைதூரத் தனிமை
குழப்பங்களால் புதியவைகளைப் பற்றுகிறது
அடையாளமாய் விலா எலும்புகளை
விட்டு வரலாமென்றாலும்
உணவிடமுடியாதவற்றிடம்
உரிமை கோரும் துணிவெனக்கில்லை
அதோ வெளிச்சத்தின் வாசனையை
நுகர்கிறது நாசி
அதன் சப்தங்களை சுவைத்துக் கொண்டேவரும்
என்மீது இரக்கம் கொண்டு
இளஞ்சூட்டில் பொன் நிறமான தேனீரைத் தருகிறீர்கள்
என்னையாரென்று வினவப் போகும் உங்களுக்கு
பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில் நடுங்குகிறது உடல்
தயவு செய்து என் குழப்பத்தை விளக்குங்கள்
முதல் நகரத்தில் சந்தித்தவர்தானா நீங்கள்
வேறொரு நகரத்திலும் நீங்கள்தான் இருக்கிறீர்களா
அடையாளம் ஏதுமில்லை
என்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- நீட் எதிர்ப்பு - புதிய பரிமாணம்!
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- இயக்கப் பணி; நம், எழுச்சிப் பணி
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- வெற்றிலை
- என் தமிழ்மொழியே! (இயற் கும்மி)
- கமிஷனர் அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்
- கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 29, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம்
- ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும்
புதுவிசை - ஜூலை 2005
- விவரங்கள்
- பா.தேவேந்திர பூபதி
- பிரிவு: புதுவிசை - ஜூலை 2005