இந்த உலகத்தில்
ஒரு கோடியே நூற்றியெட்டு
துயரங்கள் இருக்கின்றன.
வரலாறு, தத்துவம் மற்றும்
இலக்கியங்களால்
இன்னும் ஆயிரத்திற்கும் அதிகமான
துயரங்களை கண்டறிய முடியவில்லை.
உலகின் தலைசிறந்த ஓவியர்கள் வசமிருக்கும்
நூற்றிற்கும் அதிகமான வர்ணங்களால்
ஒரு கோடியே நூற்றியெட்டு
துயரங்களைத் தீட்ட இயலவில்லை.
பசி என்பது முதல் துயரமாக
பெரும்பான்மையோரால்
ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.
98-ம் துயரக்காரனான என்னை
1002-ம் துயரக்காரனொருவன் பரிகசிக்கையில்
எனக்கு சினம் மேலிடுகிறது.
ஒரு துயரமும் இன்னொரு துயரமும்
தமக்குள் சண்டை இட்டுக் கொள்வதையே
நாம் வரலாறு என்கிறோம்.
- இசை
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- நீட் எதிர்ப்பு - புதிய பரிமாணம்!
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- இயக்கப் பணி; நம், எழுச்சிப் பணி
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- வெற்றிலை
- என் தமிழ்மொழியே! (இயற் கும்மி)
- கமிஷனர் அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்
- கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 29, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம்
- ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும்
அகநாழிகை - அக்டோபர் 2009
- விவரங்கள்
- இசை
- பிரிவு: அகநாழிகை - அக்டோபர் 2009