உன் மகளிடம் நீ அனைத்தையும் தந்துவிட்டாயா?
அம்மா கேட்கிறாள் இருண்ட கண்களின் ஆழத்திற்குள்
விழுந்து கொண்டிருக்கிறது எங்கள் சமையலறை
பாய்ந்து பெருகும் நதிக்குள்
என் நைந்த தாலிச்சரடை கையிலேந்தி
என்னையும் இழுத்தவாறு நீந்த ஆரம்பிக்கிறாள் அவள்
குடிகூரா பவுடன் வாசனையுடன் நான் என்
மகளின் மகளுடைய கனவில் எழுகிறேன்
ஒற்றைப்படையில் அமைந்த எண்களுடன் நிரம்பி
இருக்கிறது இந்த ஆஸ்பத்தி
மேலும் சில பழங்கள், மீன்கள்
சாப்பிடச் சொல்லி செல்கிறது வெள்ளைநிறம்
நிறமற்று பெருகுகிறது பி-பாஸிடிவ் ரத்தம்
எந்த வாசனையும் நிறமுமற்ற ஒரு உலகில்
உறங்கிக் கொண்டிருக்கிறாள் மகளின் மகள்
வெள்ளை நிற இட்லிப் பூக்களை நள்ளிரவில்
பிரசவித்திருக்கிறது மெடர்னிடி வார்டு
பார்த்தே வளர்ந்த இந்த மரம்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- நீட் எதிர்ப்பு - புதிய பரிமாணம்!
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- இயக்கப் பணி; நம், எழுச்சிப் பணி
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- வெற்றிலை
- என் தமிழ்மொழியே! (இயற் கும்மி)
- கமிஷனர் அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்
- கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 29, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம்
- ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும்
வனம் - செப்டம்பர் 2007
- விவரங்கள்
- கீதாஞ்சலி பிரியதர்ஷினி
- பிரிவு: வனம் - செப்டம்பர் 2007