இராத்திரி முழுக்க
நிலாவையும்
நட்சத்திரங்களையும்
கழுவிக் கழுவி
சோர்ந்து போயிருக்கும்.
பின் ஓய்வில்லாது
கோழி கூவியதில்
வரத் தொடங்கியிருப்பர்
குண்டி அலசி
கால் முக்கிப் போகிறவர்கள்.
இருளையொத்த
மலையாய் வரும் எருமைகள்.
தொடர்ந்து
காட்டிலும் மேட்டிலும்
ஏறி இறங்குகிறவர்கள்
தாகத்தோடு
கை நனைத்து
மொண்டு உறிஞ்சுவார்கள்.
வருகையின் நீட்சியில்
சேவேரிய அழுக்குகளின்
முடிச்சுகளை அவிழ்த்துவிடுபவர்கள்
கூடியிருப்பர்.
மாலையில்
பாறைகளின் முனையிலிருந்து
எம்பியெம்பி குதிப்பவர்கள்.
கத்துக்குட்டி சாகசமாய்
நீச்சல் பழகும் சிறுவர்.
யாரும் அற்றுப்போனால்
தனிமையின் சஞ்சாரத்தில்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- நீட் எதிர்ப்பு - புதிய பரிமாணம்!
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- இயக்கப் பணி; நம், எழுச்சிப் பணி
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- வெற்றிலை
- என் தமிழ்மொழியே! (இயற் கும்மி)
- கமிஷனர் அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்
- கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 29, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம்
- ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும்
கூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005
- விவரங்கள்
- சா. இலாகுபாரதி
- பிரிவு: கூட்டாஞ்சோறு - அக்டோபர் 2005