இரவை எப்பொழுதும்
தென்றலைக் கொண்டு
முடைகின்றன
தென்னங்கீற்றுகள்
மாலைப் பொழுதானது
ஏதோ ஒரு பூக்காரனின்
அழுக்குப் படிந்த
வெள்ளை உறைப்பையில்
மலர்களோடு வண்டாடுகின்றது
ஒவ்வொரு முறையும்
ஒரு கல் இடறி
யாரோ ஒருவரின்
தூக்கத்தைக் கலைத்துவிடும்
மிதிவண்டியின் சங்கிலியில்
துருத்திக் கொள்ளக்கூடியது
மதியமெனச் சுளித்தபோது
எங்கள் ஊரில்
மயில்கள் அகவித் தான்
தோகை விரிக்கும்
கிழக்கு...
எல்லாம் கழிந்து
பின்னிரவில்
சாளரத்தை உரசிச் செல்லும்
ஆந்தையின் அலறலை
என்றாவது கேட்டுத்தான்
உறங்கியதே தெரிகின்றது.....!
- புலமி
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- விவரங்கள்
- புலமி
- பிரிவு: கவிதைகள்