எல்லாத் துயரங்களையும்
கொஞ்சநேரம்
தனிமையின்
பரணிலிட்டு
இந்த நிலவொளியில் அமர்கிறேன்
ஆறுதலுரைக்கும் இரவின் சொற்களை மடியேந்த..
கடன் நிலுவையின் பாரத்தை
நோய்மையுற்றலின் மனவலியை
பணிச்சுமையின் ஆக்கிரமிப்பை
உறவுகள் தரும் துயரத்தையென
பரணிலிட்டவற்றின் பட்டியலை அடுக்கதலிலிருந்தும் சற்று இளைப்பாற
தேநீரின் ஆவியேறும் காற்றை
உள்ளிழுத்துக் காத்திருக்குமென்
கவனத்தில் புதிதாய் ஒரு சுமை சேர்க்கும் ஆவலில் எங்கோ தொலைதூரத்தில்
இருளை நீந்தியபடி
ஒலிக்கிறது
இணையைக் காணாத பறவையின்
இடைவிடாத ஓலம்.
- ந.சிவநேசன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- விவரங்கள்
- ந.சிவநேசன்
- பிரிவு: கவிதைகள்