கூரை வீடு பிடிக்குமெனக் கேட்ட ஷிவனிதா
அதன் உச்சியில் எப்போதும் ஒரு சேவலை
நிற்கச் சொல்லி
வளைந்திருந்த வாலின் மீது வானவில்லை தீட்டுகிறாள்.
தென்னை ஓலைகளின்
பின்னலை
தன் ஒற்றை ஜடையை ஒத்ததென உள்ளங்கைகளில்
செல்ஃபி எடுத்து
ஒளித்துக் கொள்கிறாள்.
பனையோலை குடில்களை கொஞ்சிவரும் வரை
அவற்றை பத்திரமாக்கும் பொறுப்பு என்
சட்டைப் பையினுடையது.
ஒற்றை நிலவை
நட்சத்திரங்களாய் சிதறச்செய்யும்
கூரையின் ஓட்டைகளை அதிசயிப்பவள்
சூரியனை மட்டும்
மொழிபெயர்க்க வேண்டாமென
அவ்வப்போது கோபித்துக் கொள்கிறாள்.
அணில் விளையாடும் விட்டத்திலிருந்து
தவறி விழுமென
குருவிக் குஞ்சுகளுக்கான பிரார்த்தனைகளை
சுமந்தபடியே பள்ளி செல்பவள்
பருவத்துக்கு ஏற்றபடி மறக்காமல் வேண்டிக் கொள்வாள்..
மழையில் நனையாதிருக்க ஒரு கூரையையும்
கூரை எரியாதிருக்க ஒரு மழையையும்.
- ந.சிவநேசன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- நீட் எதிர்ப்பு - புதிய பரிமாணம்!
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- இயக்கப் பணி; நம், எழுச்சிப் பணி
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- வெற்றிலை
- என் தமிழ்மொழியே! (இயற் கும்மி)
- கமிஷனர் அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்
- கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 29, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம்
- ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும்
- விவரங்கள்
- ந.சிவநேசன்
- பிரிவு: கவிதைகள்