வாங்கி வந்த நாளிலிருந்து
எப்படிக் கட்டினாலும் அவிழ்ந்தோடும் செவலைக்கு அப்படி அடிவிழும்
மூக்கணாங்கயிற்றை சொடுக்கிய வேகத்தில்
ஒழுகும் இரத்தத்தை
வலியோடு நக்கிட
அஃறிணை உயிர்களுக்கும் கண்ணீர் வருவது
சிறார்களுக்கு வேடிக்கை
குச்சிகள் பதிந்த தழும்பில் புண் தேடும் பழக்கதோஷ ஈக்கள்
ஓடுவதற்காக அடிபடவும்
அடி விழுமென ஓடுவதுமாய் பெரிய மாற்றமில்லை
அதன் வாழ்விலும்
பெருநகரப் பிழைப்பில்
விடுமுறைக்கு ஏங்கி
உறவுகளைப் பார்க்க
பயணப்படும்போது புரிகிறது
கயிறு பிய்ந்தோடும்
செவலை
வேறு மாடுகளை நுகர்வதெல்லாம்
பால்யத்தில் பிரிந்த சொந்தங்களை
வாசனை பிடிக்கும் உத்திதானென்று.
- ந.சிவநேசன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- விவரங்கள்
- ந.சிவநேசன்
- பிரிவு: கவிதைகள்