வரப்பை நீக்கிய கூட்டுப் பண்ணையில்
தரமிகு வேளாண் பொருளைப் படைக்கவும்
முதலெனும் நுகத்தடி களைந்த தொழிலில்
மதியுடை மக்களின் தேவையை யுணர்ந்து
புவியை அதிகம் பிழியா வண்ணம்
நவிலும் சான்றோர் நல்லுரை கேட்டு
வேண்டிய பொருளை உற்பத்தி செய்ய
ஈண்டு அமைப்போம் உழைப்பவர் அரசை
(வரப்புகளை நீக்கி, கூட்டுப் பண்ணைகளை அமைத்து, அங்கே தரம் மிகுந்த வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யவும், மூலதனம் என்ற நுகத்தடியை வீசி எறிந்து விட்டு (சுற்றுச் சூழலுக்குக் கேடு வராதபடி) அறிவடைய மக்களின் தேவைகளை உணர்ந்து கொண்டு பூமியன் மூலாதாரங்களை அதிகமாகப் பிழியாமல், நல்லறிஞர்களின் ஆலோசனைகளின்படி (தொழிலாளர்களின் கண்காணிப்பில்) வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்ய உழைப்பவர்களின் தலைமையில் சோஷலிச அரசை அமைப்போம்.)
- இராமியா
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- விவரங்கள்
- இராமியா
- பிரிவு: கவிதைகள்