இவனும் தமிழன் அவனும் தமிழன்
ஏண்டா இரண்டு குவளை?
அவலம்! அவலம்! தமிழன் அழிந்தான்!
அழிந்தான் கிணற்றுத் தவளை!
தாழ்வும் உயர்வும் காட்டவோ நீ
தந்தாய் இரண்டு குவளை?
சூழும் சாவில் இரண்டு நெருப்பால்
சுடுவாயோ சொல் உடலை?
வெறுக்க வாழ்ந்தாய்! வெட்கம்! வெட்கம்!
விதித்தாய் இரண்டு குவளை!
கிறுக்குத் தமிழா! கீழ் ஆனாயடா!
கெடுத்தாய் மகனை மகளை!
பெருமைத் திமிர் வாய் அடக்கு தமிழா!
பிறகேன் இரண்டு குவளை?
இருபத் தோராம் நூற்றாண்டில் நீ
இருந்தாய்! அதுதான் கவலை!
வெடிப்போம்! நெருப்பு மலையாய் வெடிப்போம்!
வேண்டாம் இரண்டு குவளை!
இடிப்போம்! வானின் முழக்காய் இடிப்போம்!
எழுப்புவோம் பார் புயலை!
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- விவரங்கள்
- காசி ஆனந்தன்
- பிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2007