 |
யாழன் ஆதி கவிதை
அலை அடிக்கும் பெருங்கடலை
கடந்த பிறகும்
கடக்க முடியவில்லை துயரத்தை
அகதி என்னும் சொல்லில்
வெளிறிய வான்வெளி எங்கும்
புதைந்திருக்கின்றன ஓலங்கள்
இரவில் அவை ஆந்தைகளின்
குரல்களாய் அலறுகின்றன
போர்க்காலத்தில் தொலைத்த குழந்தையென
அனாதையாய்க் கிடக்கிறது ரத்தம்
தும்பை மலர்களில் தெளித்த
அதன் வாடை
விடாமல் துரத்துகிறது
கரைமீண்ட உடல்கள் எங்கும்
யுத்தக் கொடூரங்கள்
நரம்புகளை நடுங்க வைக்கின்றன
இழந்த மண்ணில் புதைந்த கண்களை
பிடுங்கிவர முடியாமல்
வெற்று திசையெங்கும் வெறிக்கும் வாழ்வில்
தோன்றுகிறது
போரற்ற ஓர் உலகம்
எல்லைகளற்ற மனித சமூகம்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|