 |
யாழன் ஆதி கவிதை

அறிவுத் தீயின் ஆற்றலில்
முறியும்
மூடத்தைத் தாங்கும்
இருட்டுக் கழிகள்
அறிவியல் ஒளியில் பிறக்கிறது
மானுடத்தின்
அடுத்த பரிணாமம்
மூலக்கூறுகளின் அமைப்பினை
மாற்றி
வாழ்வினைப் புரட்டுகிறது
உயிரித் தொழில்நுட்பம்
ஆகாயத்தின் காற்றுப்படிகளில்
ஏறி நடக்கின்றன
மனிதனின் கால்கள்
செவ்வாய்க் கோளின்
நீரினைக் குடிக்க தாகமாயிருக்கின்றன
பூமியில் பிறந்த ஆட்டுக்குட்டிகள்
செவ்வாய் தோஷத்தால்
வாழைமரத்தைக் கட்டிக் கொள்கிறாள்
இந்திய உலக அழகி
கையளவு கணிப்பொறியில்
உலகம் தெரிகையில்
கையைக் காட்டி வாழ்வைத்
தொலைக்கிறான் சோதிட இந்(து)தியன்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|