நண்பா...
எவற்றில் நாம் வேறுபடுகிறோம்?
நாம் பேசும் மொழியில்?
ஆனால் அதன் அர்த்தத்தில் அல்ல
நம் சீருடையில்?-
ஆனால் அதன் பாதுகாப்பற்ற அடையாளத்தில் அல்ல
நம் அதிகாரத்தின் வடிவில் ?
ஆனால் அதன் குரூரமான உள்ளடகத்தில் அல்ல
நம் வறண்ட நிலத்தின்
நீரூற்றுகளான நம் குழந்தைகளுக்கு
நாம் எதை விட்டுச்செல்கிறோம் ?
சிதைந்த உடல்களுடன்
வெளிறிய பார்வை கலந்த அரிய புகைப்படங்கள்;
தூசு படியும் வரலாற்று பொக்கிஷங்கள்;
இவை தவிர
அதிகாரத்தால் முடுக்கப்பட்டு
ஓயாது அசையும் தலைகள்..
நண்பா..
இனி நம் யுத்தம் எதிர்முகமானது..
நம்மை ஓயாது செதுக்கிய
உளிகளுக்கு எதிரானது…
நம் திரும்புதலின் கலகம்
வெறும் அதிகார மீட்பு அல்ல..
அதுவே நம் மனசாட்சியின் வடிவம்.
- சுரேசுகுமாரன் (