கீற்றில் தேட...

அகப்பட்டுக் கொள்ளும்
தடயங்களோடு தான்
உனது எல்லைகளைக் கடக்கிறேன்

நீலம் சொரியும் பூக்களின்
மகரந்தத் துகள்களின்
மஞ்சள் பூசி
வெட்கம் சிவக்கவே
உனது வேர்களில் ஈரமாகிறேன்

என்னைப் பறிக்க நீளும்
விரல் நகங்களின் வெண்ணிறக் கோடுகளில்
நுணுக்கமாக எழுதி வை
என்
பிரியத்தை..!

****

- இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )