*
ஒவ்வொரு சந்திப்புக்குப் பிறகும்
ஒன்றிரண்டு
நம்பிக்கைத் தளிர்களின் நிறம்
பழுக்கத் தொடங்குவதோடு
அவை..
உதிரும் சந்தர்ப்பங்களுக்கான
நுனி கருகுதலை
ஆதார நரம்புவரை பரப்பிய பின்..
கழன்று கொள்கிறது..
யாதொரு
பிரயத்தனமும் அவசியப்படாமல்..!
****
- இளங்கோ
கீற்றில் தேட...
உதிரும் சந்தர்ப்பங்களுக்கான நுனி கருகுதல்..
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்