கீற்றில் தேட...

*

நண்பர்கள் சூழ அரட்டை
மற்றும்
ஒரு குழலிசை
குரல்வளையைத் தழுவி
இதயத்தை ரீங்கரிக்கச் செய்தவாறு
மௌனத்தில் இசைத்துக்கொண்டிருந்தது

அதன் எதிரொலிகள்
மன்னிப்பு எனவும்
நன்றி எனவும்
மனதில் சுழன்றது

அங்கு
நட்பு சற்று
விலகி நிற்ப்பதை
நோக்கியபடி

மகிழாமல் நகைப்பதுபற்றி
தொடர்ந்த
சிந்தனைகள்
பொடிநடையாய்
எங்கோ செல்கிறது

முழுமைபெறாத
வினாக்களுமாய்
சில யோசனைகள்
அந்தக் கடற்கரை மணலை
அலட்சியமாய்
சிதைத்துக்கொண்டிருந்ததை
அங்கிருந்தவர்கள்
கவனித்திருக்க வாய்ப்பில்லை..

*
- கலாசுரன்