*
அகாலத்தில்
மொக்குடையும்
கனவுகளின் வனத்தில்
பட்டாம்பூச்சிகள் பூத்து
சிரிக்கிறது
இதழ் விரிக்கும் மலர்கள்
பறந்து விடுகிறது
மகரந்தத் துகள்களை
ஒற்றியெடுக்கும்
உதடுகள்
முத்தங்களைப்
பறித்துக்
கொள்கின்றன
****
- இளங்கோ
கீற்றில் தேட...
இதழ் விரிக்கும் பட்டாம்பூச்சிகள்..
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்