*
ஒற்றை முகப் பாவனையில்
யாவற்றையும் எழுதிப் போகிறது மௌனம்
கணிப்பின் மீறலில் துடிக்கும் அர்த்தங்கள்
ஒரு அடர்ந்த திரைச் சீலையைப் போல்
இவ்விரவைத் தொங்க விடுகிறது
பேச்சற்று அமர்ந்திருக்கும் மேஜையில் எதுவுமில்லை
வெறுமையின் வெளி
மெழுகிப் பூசுகிறது
மனதின் சொற்ப வெளிச்சத்தை
வார்த்தைகள் கொண்டுத் தாங்கிப் பிடிக்கும்
வலி ஒவ்வொன்றும்
அவசியமற்ற புன்னகையோடு சூழ் கொள்கிறது
சலனத்தின் மென்வருடல் நழுவி உடையும் என் நிழலில்
சில்லுகளாய் நொறுங்கிட அனுமதிக்கிறது
இக்கொடுந்தனிமை
*****
- இளங்கோ (
கீற்றில் தேட...
நழுவி உடையும் சலனம்
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்