உனக்குள் திரையில் தெருப் பலகைகளில்
எழுத்துக்களில்
துவாரங்களாய் விரிந்தபடி.
நீ, உனது நகரில், குடியிருப்பின்
மூலைக் கடையொன்றில்,
நீலப் படங்களை
வார இறுதிக்கு
வேண்டிச் செல்பவனாகலாம்
சுயபோகத்தின் பின் வெறுமையில்
தற்கொலையை நெருங்கி
மீள்பவனாகலாம்
கூட இல்லாத ஒருத்தி
இன்றிரவு உன் போதை!
நீ குடிக்கின்ற மது வகையை மறந்துவிட்டேன்
அதனால் என்ன?
கதைவழக்கில்லாத எம் கண்முன்
இரவு எரிகிறது
நம் தனிமையாலேயே இணைகிறோம் நாம்
- கற்பகம்.யசோதர