
பேசமுடியாத
முடியாத வேதனை
உன்னிடமேயிருந்திருக்கிறது
சில பொழுதுகளில்
வாளின் கூர்முனைகளை
வென்று
வலிக்கிறது
உன் மௌனம்
ஒரு மின்விசிறியின்
முதுகைப்போல்
நீ
உதிரவிடும்
வார்த்தைகளில்
பின்னப்பட்டிருக்கும்
வெறுமை
என்
கனவுகளை சிறையெடுக்கும்
எனக்காய்
நீ
உதிரவிடும்
புன்னகையின் போதாயிருக்கலாம்
சிறைமீட்பு
- த.அகிலன் (