
தையல் கடையில்
காஜா போட்டுக் கொண்டிருக்கும்
சிறுவனும்
கோயில் வாசலில்
பூக் கூடையுடன்
நில்லாது அலையும்
சிறுமியும்
பள்ளிக்குச் செல்லாது
பாண்டி பஜாரில்
கடைக்குள்ளார வந்து
பார்த்துப் போகச் சொல்லும் சிறுவனும்
எம்மா
பழம் வாங்கிட்டுப் போம்மா என
சத்தம் கொடுத்துக் கொண்டே
தன் உயரக் குழந்தையை
தன் இடுப்பில் சுமக்கும்
சிறுமியும்
சாலையில்
கைகளில் தட்டு ஏந்தி
இயர் பட் (ear bud)
வாங்கச் சொல்லும் சிறுவனும்
ரெங்கனாதன் தெருவின்
நெரிசலுக்கிடையே
ஒரு மணி நேரத்தில்
சுடிதார் தைக்கணுமா
கொடுங்க நாற்பது ரூபாய்தான் என
வலிய அழைக்கும் சிறுவனும்
காண்கையில்
இவர்களெல்லாம் குழந்தைத் தொழிலாளிகள்
இல்லையோ என்று
இன்னும் சந்தேகமாய் உள்ளது
- மதுமிதா (