‘பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
 சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு' - பாரதிதாசன்

'தமிழீழ இனப்படுகொலையும் தமிழ்ச்சமூகத்தின் கடமையும்'

பிப்ரவரி 3, 2013 ஞாயிறு
(காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை)

இலயோலா கல்லூரி, பி.எட். அரங்கு, சென்னை.

எதற்காக இந்தக் கருத்தரங்கு?

• இருபத்தொன்றாம் நூற்றாண்டிலேயே மிகக் கொடூரமான இனப்படுகொலையை மே 2009 ஆம் ஆண்டில் கட்டவிழ்த்து விட்டது, இலங்கை இனவெறி அரசு. இலங்கை அரசின் ஆவணங்களிலிருந்தே 1,46,679 தமிழீழ மக்கள் முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்டனர் என்ற உண்மை அம்பலமானது.

• 2012 நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்குழுவின் அனைத்துலகக் காலமுறை மீளாய்வு (Universal Periodic Review) கூட்டத்தில் 99 நாடுகள், 210 பரிந்துரைகளைச் சமர்ப்பித்தன. அவற்றில் 100 பரிந்துரைகளை ஏற்க மறுத்து விட்டது இலங்கை அரசு. ஊடக சுதந்திரம், போர்க்குற்ற விசாரணை, மக்கள் காணாமல் போதல், பாலியல் வல்லுறவு, சிங்களமயமாக்கல், இராணுவமயமாக்கல், தமிழ் மக்களின் பண்பாட்டினை அழித்தொழித்தல் போன்ற பரிந்துரைகளை ஏற்க இலங்கை அரசு மறுத்து வருகிறது.

• ஐக்கிய நாடுகள் அவை, சர்வதேச சமூகம் மற்றும் உலகெங்குமுள்ள மனித உரிமை அமைப்புகள், இலங்கை இனப்படுகொலை குறித்துச் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை தேவை எனத் தொடர்ந்து வலியுறுத்;தி வருகின்றன. ஆனால் இலங்கை அரசு இதைப் பிடிவாதமாக மறுத்து வருகிறது.

• சிங்களமயமாக்கல், இராணுவமயமக்கல், பொருளாளதாரப் புறக்கணிப்பு, தமிழ்ப் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை இன்றும் தமிழீழத்தில் தொடர்ந்து வருகிறது.

• இலங்கை அரசே உருவாக்கிய ‘கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையக்குழு' (LLRC) அளித்த பரிந்துரைகளை இலங்கை அரசு முறைப்படி நிறைவேற்றவில்லை என 2012 மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள்குழுவின் பத்தொன்பதாவது கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இன்றுவரை இனச்சிக்கல் குறித்து இலங்கை அரசு உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதால், 2013 பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைக்குழுகூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக மற்றொரு கடுமையான தீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளது.

• ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்களவெறி இலங்கை அரசுக்கு எப்பொழுதும் பக்கபலமாக இருந்து தொடர்ந்து ஆதரவளித்து வரும் இந்தியா, தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களின் அழுத்தங்காரணமாகக் கடந்த ஐ.நா மனித உரிமைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்க நேர்ந்தது. இருப்பினும், அந்தத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் சதியையும் கூடவே செய்தது.

• எதிர்வரும் 22 ஆவது மனித உரிமைக்குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்குமளவு, தமிழக மற்றும் இந்திய அரசுக்கு அரசியல் அழுத்தங்கொடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு எதிராகவே எவ்பொழுதும் செயல்பட்டு வரும் இந்தியா, தமிழர்களின் விருப்பத்திற்கு எதிராக இனியும் தொடர்ந்து செயல்படத் தமிழ்நாடு அனுமதிக்கக் கூடாது.

 -இத்தகைய பின்னணியில்தான் இக்கருத்தரங்கு கூட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஈழச்சிக்கல் குறித்துத் தொய்வுறாமல் தொடர் பணி ஆற்றி வந்த பல்வேறு அமைப்புகளும் இதில் பங்கேற்கின்றன. நடைமுறைச் சிரமம் காரணமாக இதில் கலந்து கொள்ள இயலாத அமைப்புக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

 கூடிக்கலையும் அடையாளச் சடங்காக இல்லாமல், தமிழக மக்கள் சக்தியை உருத்திரட்டும் ஆழ்ந்த நோக்கத்தோடு இக்கருத்தரங்கு கூடவுள்ளது. நியாய உணர்வும், மனித உரிமைகள்பால் மாளா ஈர்ப்பும் கொண்ட சனநாயக சக்திகள், ஊடகத்துறையினர், வழக்குரைஞர்கள், மாணவர்கள், தமிழ்ஆர்வலர்கள், முற்போக்கு இயக்கத்தினர், பகுத்தறிவு அமைப்பினர், படைப்பாளிகள், கலைஞர்கள் எனச் சமுகத்தின் அனைத்துப் பிரிவினரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தீபச்சுடரை மங்கி விடாமல் காக்க வேண்டிய கட்டாயத்தை வரலாறு நமக்கு முன்னால் உருவாக்கியிருக்கிறது.

 உணர்ச்சிமிக்க போராட்டங்களோடு அறிவார்ந்த விவரங்களை இணைக்க வேண்டிய தருணம் இது. எனவே தமிழீழத்தில் இப்பொழுது நடப்பது என்ன? கடந்த காலகட்டத்தில் சர்வதேச சமூகம் ஏன், எப்படி நம்மைக் கைவிட்டது? அதன் கொடூரமான பின்னணி என்ன? ஈழப் போரட்டம் குறித்து மாறிவரும் புவிசார் அரசியல் அணுகுமுறையில் எத்தகைய இராஜதந்திரத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்? இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள பல்வேறு தேசியஇன மக்களின் ஆதரவைப் பெற நாம் எப்படிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்? என்பன போன்ற அடிப்படையான, ஆழமான கேள்விகளுக்குத் தீர்வைத் தேடி இக்கருத்தரங்கு கூட்டப்பட்டுள்ளது.

 எனவே, வேற்றுமைகளை மறந்து தமிழ்மக்கள் சார்பாக நாம் ஒன்று கூடுவோம். தனிமரம் தோப்பாகாது; ஒரு கை ஓசை எழுப்பாது; கூடி வாழ்ந்தால் கோடி நன்மை; ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு என்பதை மனதில் கொள்வோம். நம்மை பிரிக்கும் புள்ளிகளை விட, நம்மை இணைக்கும் கோடுகள் அதிகம் என்பதையும் புரிந்து கொள்வோம்.

புதிய விடியல் நோக்கித் தடம் பதிப்போம்.
 
நிகழ்ச்சி நிரல்

காலை 9.45 மணிமுதல் 10.15 மணிவரை - தேனீர்

கருத்தரங்கு

காலை அமர்வு - (காலை 10.15 மணி முதல் மதியம் 1.30 மணி வரை)

‘இலங்கை இனப்படுகொலையும், சர்வதேச சமூகத்தின் தோல்வியும்'

தமழீழ எழுச்சிப் பாடல்கள் - திரு. குமரன் (சமர்பா கலைக்குழு)

தலைமை

திரு. அய்யநாதன் (சர்வதேசத் தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி)

இசைப்பிரியா படத்திறப்பு

திருச்சி திரு. கே.சௌந்தரராஜன் (பெரியார் அண்ணா பேரவை)

அறிமுக உரை

திரு. பொன்.சந்திரன் (மக்கள் நல்வாழ்வு இயக்கம்)

படக்காட்சியுடன் தொடக்க உரை

திரு. பால்நியூமென் (பேராசிரியர், பெங்களூர் பல்கலைக் கழகம்;)

கருத்துரை

திரு. சி.மகேந்திரன் (துணைப் பொதுச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி)
திரு. விடுதலை இராஜேந்திரன் (பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்)
திரு. கோவை ஈசுவரன் (மார்க்சியத் திறனாய்வாளர்)
திரு. தியாகு (பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்)
திரு. திருமுருகன் (ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்)
திரு. தமிழேந்தி (மார்க்சிய - பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி)

மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை - மதிய உணவு
 
மதிய அமர்வு (மதியம் 2.30 மணி முதல் 4.00 மணி வரை)

‘இலங்கை இனப்படுகொலையும், சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்டுதலும்'

தலைமை :

பேரா.சரஸ்வதி (நாடாளுமன்ற உறுப்பினர், நாடு கடந்த தமிழீழ அரசு)

தொடக்க உரை

திரு.ஹென்றி டிபேன் (இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்)

கருத்துரை

திரு. மணிவண்ணன் (பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம்)
திரு. இரமேஷ் (ஆசிரியர், கீற்று இணையதளம்)
திரு. பி.சி.வினோஜ்குமார் (ஆசிரியர், The Weekend Leader இணைய இதழ்)
திரு. செந்தில்குமார் (தமிழர் காப்பு இயக்கம் - Save Tamils - ஒருங்கிணைப்பாளர்)

மாலை 4.30 மணிமுதல் 5.00 மணிவரை - தேனீர்

மாலை அமர்வு

மாலை 5.00 மணிமுதல் இரவு 8.30 மணி வரை

‘இலங்கை இனப்படுகொலையும், தமிழீழ மக்கள் விடுதலையில் தமிழ்நாடு மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தின் பங்களிப்பும்'

தலைமை

திரு. புகழேந்தி தங்கராஜ் (திரைப்பட இயக்குநர்)

தொடக்க உரை

திரு. கண.குறிஞ்சி (ஒருங்கிணைப்பாளர், மக்கள் நல்வாழ்வு இயக்கம்)

கருத்துரை

திரு. வை.கோ. (பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்)
திரு. வேல்முருகன் (பொதுச்செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி)
திரு. தெஹ்லான் பாகவி (தலைவர், SDPI கட்சி)
திரு. கி.வெங்கட்ராமன் (பொதுச்செயலாளர், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி)
திரு. புலமைப்பித்தன் (கவிஞர்)
திரு. இரா.அதியமான் (நிறுவனத் தலைவர், ஆதித் தமிழர் பேரவை)
திரு. குமாரதேவன் (தலைமை நிலையச் செயலாளர்,தந்தைபெரியார் திராவிடர் கழகம்)

தீர்மானங்கள் நிறைவேற்றுதல்

திரு. ஜார்ஜ் (பூவுலகின் நண்பர்கள்)

நன்றியுரை

திரு. பிரமீதியஸ் (மக்கள் நல்வாழ்வு இயக்கம்)

தொடர்புக்கு - 94433 07681, 94804 90446, 91765 33157, 94430 39630