 |
கட்டுரை
மதியுரை அகரம் அமுதா
தேய்ந்து தேய்ந்து
தொலைந்த நிலாவும்
தோன்றி வளருது கண்டாயா ? - அது
தேய்ந்து தொலைந்தும்
தோன்றி வளர்த்தும்
தருமதி யுரைதனை கொண்டாய?
வளரும் போதும்
மதியிழந் தேசிறு
வழியும் மாறிச் செல்வதில்லை - அது
தளரும் போதும்
தன்னை மறந்து
தடத்தை மாற்றிக்கொள்வதில்லை!
கொடுக்கக் கொடுக்கக்
குன்றும் குறையும்
கோள நிலாவும் குறைகிறது - தனை
எடுத்துக் கொடுத்த
இளைய நிலாவின்
இசையே பிறையாய் நிறைகிறது!
முயன்றால் நிச்சயம்
ஏற்ற மென்பதே
பிறைவளர்ந் துணர்ந்தும் மதியுரைகாண - நாம்
முயலா விட்டால்
வீழ்ச்சி யென்பதை
முழுமதி தேய்ந்து உரைப்பதுகாண்
இல்லை என்னும்
இருளை ஓட்ட
இளைய நிலாபோல் ஈந்துவிடு - நீ
தொள்ளை காணா
திருக்க வேண்டின்
ஈயும் போது ஆய்ந்துகொடு
- அகரம் அமுதா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|