 |
கவிதை
நின் சலனம் அறிவுநிதி
மலரில் இளைப்பாறும்
பட்டாம்பூச்சயின் சிறகசைப்பாய்
உன் நினைவுகளில்
என் இதயம்
இமைமூடி
உறங்கமறுக்கும் இருவிழிகளுக்கு
இடையில்
திறந்தே கிடக்கிறது
உன் முகப்படம்
கரையைக் கடக்காத அலைகள்
மீண்டும் மீண்டும்
அதன் முயற்சிபோல
நானும் காதலில்
உனக்கு ஒரு புதுப்பெயர்
ஒப்பிடுகிறேன் திருடி
மலர்மோதி மலர் சிதைந்ததில்லை
உன் பொய்கோபம் போல
நாம்
அடிக்கடி பிரிக்கப்படுகிறோம்
என் தனிமையை கலைக்கும்பொதெல்லாம்
நம்
யுத்தங்கள் நீண்ட மௌனத்தில்
இதயங்கள் சரணடைந்தன.
- அறிவுநிதி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|