 |
கவிதை
மற்றுமொரு... அறிவுநிதி

ஒரு முடிவு பேரிரைச்சலாகிறது
பிரிவு அல்லாது காலத்தின் கருணை
சத்தங்களால் காயப்பட்டும்
மெதுவாக படர்கிறது யாருமறியாத
மௌனம்
வாழ்க்கையை புறம் தள்ளி
புன்னகையும் விசாரிப்புகளும்
தொலைகிறது
சோகங்களை விழுங்கிக்கொண்டு
பரிச்சயமாகிறது இறப்பின் ஒத்திகை
மலர்வளையங்கள் போதிக்கின்றன
ஆத்மார்த்தங்களை
இறந்தவனின் முன் காலம்
நிதர்சனமாகிறது
மரணம் நினைவுகூறுகிறது
மற்றுமொரு மரணத்தை.
- அறிவுநிதி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|