 |
கவிதை
தலைமுறைபகிர்வுகள் அறிவுநிதி
கனிபறிக்கும் ஆவலில் மரமேறுகிறான்
மரம் ஏதுவாகிறது
மரத்திலுள்ள கனிகள் அதன்
காலத்தை காட்டிக்கொடுக்கிறது
கனிகளை பறிக்கிறான்
விழ மறுக்கிறது
மரத்தோடு கனிகளை சுவைக்கிறான்
பிறகு
எறும்பின் பாவனையில்
மரமெங்கும் பரவுகிறான்
மரம் வேரோடு சாய்வதுபோல்
அசைகிறது
பெறும் மிரட்சியுடன் அதன்
கிளைகளை பற்றிக்கொண்டு
அவனும்
மரத்தோடு அசைகிறான்
உயிர்வதை துவங்குகிறது
மெல்ல மெல்ல கீழிறங்குகிறான்
பரபரப்பும் பயமும் தீர்ந்தவனாய்
தலைமுறைபகிர்வுகளாகிறது
- அறிவுநிதி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|