 |
கவிதை
ஜன்னலோரம் அறிவுநிதி
இன்று
வெய்யில் அதிகம் தான்
அதன் பலனோ என்னவோ
மழை
மழையின் சுவடுகளை
தாங்கியிருந்த செடியின் இலைகள்
எங்கும் ஈரப்பதம்
இருப்பினும்
இரவு வந்துவிட்டது
நிலவும் தான்
கசியும் நிலவொளியில்
எல்லாம் அழகு தான்
சிறு
சிறு நீர் தேக்கங்களில்
சிதறிக்கிடக்கிறது நிலவு
நிசப்தங்களில்
முன்னுரிமைபெற்ற இரவுபூச்சிகள்
ஏதோ பேசிக்கொள்கிறது
இந்த மௌனத்தை கலைக்கிறது
இலைகள் தாங்கிவிட்ட
மழையின் சடலங்கள்
மழைகலந்த காற்று
என்னுள் சில்லிப்பூட்ட
கவிதை ஏக்கமாய்
புன்னகைக்கிறேன்.
- அறிவுநிதி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|