 |
கவிதை
குருதியில் குளித்த எழுதுகோல்
க.தே.தாசன்
ஒ......| அந்த கொடிய கணங்கள்
என் இதயத்தில் கனக்கின்றன
இது உங்கள் இதயத்திலும் பதியட்டும்.......;
பாவிகள் கொண்ற என்
பிஞ்சு சோதரனின் சட்டைப்பையில்
குருதியில் குளித்த எழுதுகோல் எழுதுவதில்
எங்கள் எழைக்குடிசை அடுப்பில்
அரிசி வெத்தும் வேகாத வேளை......
.எல்லாவீடும் உண்டு உறங்கும் வேளையது
பள்ளியிலிருந்து வந்த தம்பி
பசியோடு ஆவலாதிப்பட்டுண்டு
ஆறும் வேளை.................
அக் கொடுகை நிகழ்ந்தய்யோ.
வானலையில் வந்த வல்லூகளின்
இரண்டு எச்சங்கள் விழுந்து சிதற
காதைக் கிழிக்கும் பேரோசை
குடிகள் பற்றி எரியும் சுவாலை
அதனிலும் மேலேழும் அவலக் குரல்கள்
எரியும் குடிசை நோக்கி
என் கால்கள் விரைகின்றன
மனமோ சிதறி சுழன்றடிக்குது.
வெந்த குடிசையின் வெளியே
செல்ல பூளையின் சிவத்த தசை
மரங்கள் சிதைந்து மண்ணில் கிடத்தன
வீடென்பது அதொரு கொங்கனவாய்
‘’சின்னவன் சின்னவன்’’
என் மனம் கலங்குகின்றது
அங்கே அங்கே........ அந்தக் கொடுமை
உண்ட சோறு வெளியே
சோற்றுக் கிண்ணியில் மண்டைக் குழம்பு......
இனியும் எத்தை உயிர்ரோ........
வல்லூறின் பசிக்கு இரையாகுமோ?
- தாசன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|