 |
கட்டுரை
ஓடுமீன் ஓட...! இப்னு ஹம்துன்
ஆழ்ந்தும்...
ஒருமித்த மனதோடும்....
என்னுள்ளும் தேடிப்பார்க்கிறேன்
இன்னும் பணம்...
இன்னும் பணம்... என
எண்ணும் முதலாளிகளைப்போல!
பறந்துவரும்
பட்டாம்பூச்சியைப் போல
வண்ணங்களாலும்
வாசனைகளாலும்
ஈர்க்கப்படவே செய்கிறேன்.
காணும்போதெல்லாம்
காதலை எதிர்பார்க்கும்
விடலையைப் போல்
கண்ணில் படுபவற்றை
நிராகரிக்காமல்
நிறுத்துப்பார்க்கிறேன்.
பாகுபாடில்லாமல்
ஏற்றுக்கொள்கிறேன் நதிகளை
ஒரு கடலைப்போல்!
என்றாலும்...
எப்போதாவது தான்
அகப்படுகின்றன
எதிர்பார்க்கும் விதத்தில்
கவிதைகள்!
- இப்னு ஹம்துன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|