 |
கட்டுரை
பெத்த கடன் கவிமதி
எந்தபுள்ளைக
ஆண்டவன பாத்துச்சி
அப்பனாத்தாள தவிர
அள்ளி அள்ளி
கொடுத்ததுக்கே
ஆயுசுபூரா
கடனாளியாயிட்டோம்
களச்சிபோயிவர
ஆத்தாவுக்கு காலமுக்கவும்
ஒழச்சிவர அப்பனுக்கு
ஒடலமுக்கவும்
முடியல
புலம்பெயர்ந்தப்பவே
புடிச்சிபோச்சி
இந்த தரித்திரம்
அடுத்த சென்மத்திலாவது
ஆடு,மாடுகளா பொறந்து
அசந்து தூங்கறவுக கூட
அசப்போட்டுகிட்டே பேசணும்
- கவிமதி, துபாய் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|