 |
கட்டுரை
அறுபடும் நிலையிலொரு கயிறு கவிமதி
மல்லாக்க படுத்துக்கொண்டு
எச்சில் துப்புகிறது
சில கூட்டம்
ஒலிநாடா, படநாடா
குறுந்தகடு, செய்தித்தாள்
தொலைக்காட்சியென
அனைத்து ஊடகங்களும்
அறிவற்று
பயன்படுகின்றன அதற்கு
இவர்களுக்கெதிராக
அவர்களும்
அவர்களுக்கெதிராக
இவர்களுமென
மாறி மாறி மாறி
ஒட்டிக்கொண்ட
சுவரொட்டிகள் சொல்லுமோ
ஒற்றுமையெனும் கயிற்றின்(குரான்)
இரு முனைகளும்
இழுக்க இழுக்க
அறுந்துதான் போகுமென்று
வெட்கத்தை வித்ததால்
நிறைய எச்சில் தழும்புகள்
இந்த கூட்டங்களின் முகத்தில்
இன்றும் தனக்குதானே
துப்பிக்கொண்டு தானிருகின்றன
மல்லாக்கப் படுத்துக்கொண்டு
உலகம் துப்புவதை நிறுத்திக்கொண்டது.
- கவிமதி, துபாய் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|