 |
கட்டுரை
சுதந்திரதினம் கவிமதி
உன் குலம்
அழிஞ்சேபோச்சுன்னு
குதிச்ச
நா குளத்துல
கைய வச்சதுக்கு
கொச கொசன்னு
வழியிர குருதி காயத்தோட
அண்ணன் பிணம் வந்தப்போவ
அடிவயித்த புடிச்சிகிட்டு
அப்பவே போயிட்டா ஆத்தா
அடிச்சி புடிச்சி
அப்பனுக்கும் போட்டானுவோ
பொய் வழக்குகள
மேல் சட்டையே போடவிடாம
பொரட்டி பொரட்டியெடுத்துட்டு
கையில குடுக்குற
இத்துனூண்டு
கொடியும் குண்டூசியும்
கேடுகெட்டு நா
கொண்டாடனுமா
சுதந்திர தினம்
- கவிமதி, துபாய் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|