 |
கட்டுரை
கோடைத்துயில் மாலதி மைத்ரி
பருவங்களென எப்பொழுதும்
உனது நிகழ்வுகளை
பெய்தும் பொய்த்தும்
பூத்தும் காய்ந்தும்
உறைந்தும் தழுவியும்
எனது உடம்பு
தளும்பியும் நுரைத்தும்
பாய்த்தும் தேங்கியும்
வறண்டும்
எல்லாக் கோடையிலும்
உனது வரவை எதிர்நோக்கி
என் உடம்பில்
முட்டைகளையும் விதைகளையும்
பாதுகாத்தபடி
வசந்தத்தின் முதல் மழைக்கே
மண் நனைந்து
முலைகள் மொட்டவிழந்து விடுகின்றன
மீன் குஞ்சுகள்
உடம்பில் உள்நிரம்பி மொய்க்கின்றன
- மாலதி மைத்ரி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|