 |
கட்டுரை
ரோஜாப்பழம் மாலதி மைத்ரி
நீ அழும்போது உன்முகம்
ரோஜாபூப் போல இருக்கிறது அதனாலேயே
உன்னை நான் அடிக்கடி
அழவைத்துப் பார்க்கிறேன்
பூவே இத்தனை அழகென்றால்
ரோஜா பழுத்தால் அதன் நிறமும் சுவையும் மணமும்
எப்படி இருக்கும்
சாறூறிய உனது உதடுகளை
யாருக்குத் தின்னத் தருவாய்
மகளே
என் ரோஜாப் பழமே
- மாலதி மைத்ரி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|