 |
கவிதை
"டோண்ட் டாக்" ஜெ.நம்பிராஜன்
பள்ளி செல்லும் வழியில்
பழுதடைந்து நின்றது பேருந்து
வயல்வெளிச் சாலையில்
இறங்கி நின்ற மழலைகள்
பள்ளியை மறந்து பரவசமாயினர்
குயில்களின் கூவலோடு சேர்ந்தது
குழந்தைகள் குரல்
குழந்தைப் பருவம் தொலைத்த
நடுத்தர வயது ஆசிரியை
எரிச்சலோடு சொன்னாள்
"டோண்ட் டாக்".
- ஜெ.நம்பிராஜன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|