 |
கட்டுரை
உயிர் காற்று பத்மப்ரியா
காற்றாய் வந்தாய் கலந்தாய் என்னுள்
உயிர் மூச்சாகி உயிர்த்தெழுப்பினாய்
தென்றலாய் தவழ்ந்தாய் - காதல்
தெய்வதம் காட்டினாய்
சந்தன சாரலாய் சாமரம் வீசி
வெறுமையை வேரறுத்தாய்
ஊதற்காற்றாய் ஊடுருவி - என்
உயிரிருப்பை உணர்த்தினாய்
வாடிநிற்கையில் வாடைக்காற்றாய் வருடி
வானவில்லாக்கினாய் வாழ்க்கையை
ஆனால். . .
அனைத்திற்கும் அடிப்படையாய்
உயிரிருக்க வேண்டுமெனில்
உள்ளுறையும் மூச்சு காற்றுமிருக்க வேண்டும் - அது
மனித உரிமைகளில் ஒன்றல்லவா?
என் உயிர்மூச்சே - ஏன். . .
சூறாவளியாய் சுழன்றடித்தாய்?
நீ சூறாவளியாகு
ஆனால் என்னை
சூனியத்தில் சுழற்றி அடிக்காதே
நீ புயற்காற்றாய் சீறு
புள்ளியாய் கரைந்திருப்பேன்
உன் மனம் போல
இருந்தாலும் இறுதியாய் ஒரு முறை கேட்கிறேன் . . .
வீழ்ந்துகிடக்கிறேன் நான் . . .
உனது விழியசைவால் என்னை மீட்பாயா ?
மீட்டபின் கரைசேர்க்க
கடற்காற்றாய் வருவாயா? இல்லை. . .
மீளா சூடேற்றும்
மின் விசிறி காற்றாய் கரைவாயா?
- பத்மப்ரியா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|