 |
கவிதை
காணவில்லை
பாண்டித்துரை
என் வீட்டு ஜன்னலில்
வானத்தை காணவில்லை
எதிர்பட்டவை எல்லாம்
தூக்குமாட்டி தொங்கும்
வட்டுடைகளும்
வர்ணம் இழந்த ஜட்டிகளுமே...
வே(ர்)றெங்கோ..
இலை
உதிர்கிறது
காற்றிடம்
கொண்ட கலவியிலே
கசங்கிப் போயிருக்கவேண்டும்
அங்கும்
இங்கும் ஓடி..
மண்ணிலே மக்குகிறது
வளர்த்த மரம்விடுத்து
வே(ர்)றெங்கோ..
- பாண்டித்துரை ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|