 |
கவிதை
வைக்கட்டுமா... பாண்டித்துரை
ஏன் பதட்டமோ
உனக்கு
போன்பண்ணவரும்போது மட்டும்
தலை கால் புரியவில்லை
தடுமாற்றமிறின்றி
உன் நம்பர் அடிக்கிறேன்
ஒரு ரிங்கில் நீ எடுக்க
ஓராயிரம் முறை
ஊன்னிடம் வேண்டினேன்
கேட்டிருக்க வேண்டும்
எடுத்ததும் பேசவில்லை
எதிர் முனையில் - நீ
இருப்பது தெரிந்து விட்டது
முதலில் பேசியது - நம்
மூச்சு காற்றுதான்
முப்பது நிமிடம் ஆகியிருக்கும்
முடிவாய் நாம் பேசியது
நேரமாச்சு
வைக்கட்டுமா போனை...
- பாண்டித்துரை ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|