 |
கவிதை
இரவின் தீண்டல் பாண்டித்துரை
சர்ப்பத்தை அணைக்கும் பொருட்டு
குளிர்ச்சியினை வெளிப்படுத்துகிறது இரவு
நீண்டதொரு இரவினை
எட்டிப்பிடித்தே சர்ப்பம் முன்னேறி
இரவு நேரங்களை
விழுங்கத் தொடங்குகிறது
சர்ப்பத்தின் விருப்பப்படியே
இரவு வளைந்து செல்கிறது
இரவின் தீண்டலில் திருப்தியற்ற சர்ப்பம்
பின் தங்க நேரிடுகிறது
களைப்புற்ற சர்ப்பம்
தன் சட்டையைக் கழற்றி
இரவினை புரட்டிப்போடும் உத்வேகத்துடன்
மீண்டும் முன்னேறுகிறது
பொழுது புலரத்தொடங்குகிறது
ஒரு மூலையில் சர்ப்பம் சுருண்டு கிடக்க
- பாண்டித்துரை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|