 |
கவிதை
வண்ணாத்திப்பூச்சி பாண்டித்துரை
புன்னகைளை அனுப்பிய வண்ணமாக
இருக்கிறாள்
தன்னை யாரும் கவனிக்கக் கூடுமென
வண்ணாத்திப் பூச்சியை
எட்டிப்பிடிக்க
மேலே உயரும் கைகள்
ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள
இசை பிறக்கிறது
ஆமோதிப்பதாய்
நீளும் நாவினில்
உதிக்கும் நீர் குமிழிகள்
உடைந்து சிதறுகிறது
கண் சிமிட்டலுடன்
புதிதாய் மனிதன் கடந்து செல்கிறான்
உலகம் சுற்றும் மருண்ட விழிகளுடன்
மீண்டு வருகிறாள்
இம்முறை
கால்களும் உயர்ந்த வண்ணமாய்
வண்ணாத்திப் பூச்சியை எட்டிப்பிடிக்க
- பாண்டித்துரை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|