 |
கட்டுரை
பிணக்கடன் ரசிகவ் ஞானியார்
சமூக பிதற்றலுக்குப் பயந்து
சாவு வீட்டுக்கு
சம்பிரதாயத்திற்காய் சென்றேன்.
பூமியில் வாழுகின்ற
ஒப்பந்தத்தை முடித்துவிட்டு
சொர்க்கமோ? நரகமோ?
புலம் பெயர்கிறது அது
எத்துணை மதிப்புகள்
இருந்தாலுமென்ன..?
இருக்கும்வரை அவர்
இறந்துவிட்டால் அது
தெளிக்கப்படும்
வாசனைத்திரவியங்களில்
நாற்றத்தை உணர்கின்றேன்.
திருமணத்தில் தெளிக்கப்படுகின்ற
பன்னீர்தான் என்றாலும்
தெளிக்கப்படும் இடம்தான்
வாசனையை தீர்மானிக்கிறது!
தெருவில் தள்ளிவிட்டு
அவமானப்படுத்திய
கடைசிமகன்
காலைப்பிடித்து அழுதுகொண்டிருக்க
தனிக்குடித்தனம் சென்றுவிட்ட
தலைப்பிள்ளையோ
பாடைகட்டும்
பரபரப்பில் சுற்றிக்கொண்டிருக்க..
அதிகம்
துக்கப்படுவதாய் காட்டிக்கொள்ள
மார்பில் அடித்துக்கொண்டு
அலறும் சொந்தங்கள்..
என்னைப்போல்
சம்பிரதாயத்திற்காய்
வந்தவர்கள் யார்யாரோ
திணறி திணறி
முகத்தை சோகமாய்
மாற்றிக்கொள்ள முயல...
சடங்குகள் முடிந்து
பாடை தூக்கப்படும் நேரத்தில்
மனச்சுமையை குறைக்க மறந்த
மகன்கள்..
பிணச்சுமையை முதல்வரிசையில்
தாங்கிக்கொண்டிருக்க
வேடிக்கைகளையெல்லாம்
வெறித்துப்பார்த்துவிட்டு
கண்ணீரோடு நானும்
கலைந்து சென்றேன்.
என்னிடம்
பிணம் வாங்கிய கடனை
பிறர் தருவாருண்டோ..? என்ற
அதிகப்படியான வேதனையோடு..
- ரசிகவ் ஞானியார் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|