 |
கவிதை
உசுப்பும் உபதேசம் வேண்டாம் சி.வ.தங்கையன்
கருகிப்போன பயிரைப் பார்த்து
உருகிப்போச்சு உசுரு - பின்
காலேஜிலே மகனைச் சேத்தேன்
பிஞ்சுது தல மசுரு - இங்கு
மதத்த ஜாதியை நெனச்சுப் பாக்க
நேரம் எங்கே கூறு - நம்
மக்கள் சிக்கலை போக்கிறதுக்கு
வழிகளுண்டா பாரு!
சோத்துப் பாட்டுக்கு ஒழைப்பதுவே
சோலியான போது - வேறு
சுகங்களெல்லாம் யோசிக்க
சூழல் இங்கே ஏது - இப்போ
ஆசுப்பத்திரி செலவு வந்தா
அதோடு நாங்கள் காலி - அரசு
ஆசுப்பத்திரி நல்லா இருந்தால்
எனக்கு கொஞ்சம் காமி!
நல்ல நாளு பெரிய நாளு
வந்து போற நாளில் - நாங்க
நகர முடியாம பெரிய வெலங்கு
விழுந்துவிடும் காலில் - நல்ல
சந்தோசத்தே தருவதுதான்
விழாவுங்கன்னு சொல்வார் - இது
சங்கடத்தத் தருவதெல்லாம்
யாரு கண்டு கொள்வார்?
கவனமெல்லாம் வேறு பக்கம்
திசை திருப்ப வேண்டாம் - எங்கள்
கஷ்டம் தீர சுலபமான
வழிகளும்தான் உண்டா? - ஏதும்
உண்டுன்னா இங்கே வந்து
உபதேசம் பண்ணு - அது
இல்லை என்றால் பேசாமல்
இடத்தை காலி பண்ணு!
- சி.வ.தங்கையன், பட்டுக்கோட்டை. ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|