 |
கட்டுரை
காதலற்ற கோடைக்காலம் சுகிர்தராணி
முதிர்ந்த வெயிலால் நிரம்பியுள்ளன
யாருமற்ற வீதிகளின் பள்ளங்கள்
கானல்நீரைக் கவிழ்த்தபடி
நீண்டுகிடக்கிறது நெடுஞ்சாலை
உடல் முழுவதும் கைகளையேந்தி
தாகம் தணிக்கச் சொல்லுகிறது
நெளிந்தோடும் நதி
வறட்சியால் ஒடிந்து விழுந்த
மலைகளின் நிழல்களிலெல்லாம்
அனல் எரிந்த புகை
கொண்டாட்டத்துடன் மலர்களை உதிர்த்த
செம்மரங்கள்
கழன்றுவிழும் இலைகளைக்
காணச்சகியாமல் தேம்பியழுகின்றன
பறவைகளின் சிறகசைப்புகளை
எங்கேயும் கேட்கமுடியவில்லை
தொங்கிய முகத்துடன் அலையும்
மனிதர்கள் யாரும்
யாருடனும் பேசிக்கொள்வதில்லை
மண்புழுக்கள் கருமுட்டைகளை
எங்கு இடும்
இப்போதும் ஆச்சர்யமாக இருக்கிறது
எப்படித் தேர்ந்தெடுத்தாய்
இந்தக் கோடைகாலத்தை
என் காதலை நிராகரிக்க.
- சுகிர்தராணி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|