 |
கவிதை
தேர் வரா வீதி யுகபாரதி
தேர் வரா வீதியெங்கள் வீதி
தேர்போலும்
வந்ததே கிடையாது பேருந்து
ஒரே ஒரு முறை பிளசர் வந்தது
செத்துப்போன லதாவை இறக்கிவிட
அதுமுதல் பிளசரின் வண்ணம்
கருப்பென்று சொல்கின்றன
குதியாட்டம் போட்ட குழந்தைகள்
டிராக்டரோ லாரியோ
ஆட்களை ஏற்றிப்போக வருவதுண்டு
மாநட்டுப் பந்தலுக்கு
மெய்யாலுமே தெரியாது
ஏரோப்பிளேனுக்கும்
எலிகாப்படருக்குமுள்ள வித்தியாசம்
எதுவும் வரத் தயங்குகிற எங்களூருக்கு
ஏன் எப்போதும் வந்து தொலைக்கிறது
பஞ்சமும் சாதிப் பிணக்கும்
- யுகபாரதி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|