அடிமை நிலையை ஒழித்துச் சுரண்டலின்
முடிவைக் கொணர மண்ணிற் கேற்ற
வழியே இயக்கப் பொருள்முதல் வாதம்
அழியாக் கருத்தைத் தெளிவாய்க் கூறும்
மார்க்சியம் தன்னைப் பார்ப்பனர்க் காக
நீர்க்கச் செய்து வறட்டுக் கருத்தை
ஏற்கச் சொல்லும் பொதுமைக் கட்சியே
நாற்புறம் நோக்கா அறிவிலி அல்லோம்
மண்ணின் பண்பை மறைத்து எதையும்
திண்மையாய்க் கூறலால் ஏற்றுக் கொள்ள
(அடிமைத்தனத்தை (முற்றிலும்) ஒழித்து, சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வர, அந்தந்த தேசத்தின் நிலைமைகளுக்கு ஏற்றபடி செயல்பட வேண்டும் என்று தான் பொருள் முதல் வாத மெய்ஞ்ஞானம் தெளிவாகக் கூறுகிறது. (ஆனால்) பார்ப்பனர்களின் சுரண்டல் கொள்ளை பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, மார்க்சியத்தை நீர்க்கச் செய்து, வறட்டுக் கருத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லும் பொதுவுடைமைக் கட்சிகளே! மண்ணின் பண்பை மறைத்து (நீங்கள்) எதையும் உரக்கக் கூவிக் கூறுவதாலேயே அதைச் சரி என்று ஏற்றுக் கொள்ள (நாங்கள்) நான்கு பக்கமும் பார்க்காத அறிவிலிகள் அல்லோம்.
- இராமியா
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)
- விவரங்கள்
- இராமியா
- பிரிவு: கவிதைகள்