நானும் சென்றேன்
என்னோடு அவனும் வந்தான்
பெரிதாய் உருவத்தில் வேறுபாடென்றாலும்
வாழும் முறையில் ஓன்றே
நானும் தெருவில்
அவனும் தெருவில்
என் நாவும் வெளியே நீளும்
அவனது நாவும் வெளியே நீளும்
சில நேரங்களில்
அவன் என்னை வென்றுவிடுவான்
சில நேரங்களில்
நான் அவனை வென்றுவிடுவேன்
எல்லாம்
ஓருவேளை எச்சில் இலைக்காக
ஓவ்வொரு வீட்டின்
முன் வாசலிலும்
அவன் நீண்ட வாலை நீட்டிக் கொண்டும்
நான் நாவை வாலாக நீட்டிக் கொண்டும்
தொங்கவிட்ட படியும்
தெருக்களில் யாசக இரவல் குரைப்புடன்...
- இல.பிரகாசம்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)
- விவரங்கள்
- இல.பிரகாசம்
- பிரிவு: கவிதைகள்