நாத்திக காற்றில்
சாத்திக் கொள்கிறது
சடங்குகளும் சம்பிரதாயங்களும்
மடமையாய் இருந்த
தடைகள் எல்லாம் மடிந்துவிட்டது
பகுத்தறிவு பாதையில்
சூழ்ச்சமங்களாய் இருந்த வலை
சுருண்டு விட்டது
சுயமரியாதையால்
அடிமை சமுதாயம் எதிரியை
அடக்க அலையாய் எழுகிறது
விடுதலை என்னும் பெயரால்
குரல் கொடுத்தால்
அதிர்ந்துவிடும் அக்கிரகாரமே
இனி
மண்ணுக்காக அலைந்தவர்கள்
மடிந்து தான் போக வேண்டும்
மண்ணை மீட்டெடுப்போம்
ஆதி தமிழராய் நாமளே ஆளுவோம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)
- விவரங்கள்
- த.பு.மூர்த்தி
- பிரிவு: பெரியார் முழக்கம் - மே 2006