கீற்றில் தேட...

திமிர்ந்த தேகத்தின்
கனிந்த மார்பு
கோயில் மணியின்
நாவுகளாய் தொங்குகிறது..!

புடைத்த நரம்புகள்-
தளர்ந்த கயிற்றுக்கட்டிலாய்
கழன்று கிடக்கிறது..!

கேள்விக்குறியாய் வளைந்த
கூன்-
மண்ணைப் பார்க்கிறது..!
எதிர்காலத்தின் ஏக்கத்துடன்..!

நிழலும் பிரிகின்ற..
நேரத்தைப் பார்த்த படி
காலக் கடிகாரத்தின் முள்
நின்று போகும் சூழலை
எதிர்பார்த்து சுற்றுகிறது...!

தன்னைத் தவிர..
யாரும் துணையில்லை..!

தன்னைப் போலிருக்கும்
சுருக்குப்பையை மட்டுமே
நேசிக்கிறாள் கிழவி..!

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)