கீற்றில் தேட...

வானத்தின் காட்சிகளையும்

கடலின் தன்மைகளையும் போல
மாறிக் கொண்டிருக்கின்றன
உனது புறக்கணிப்பிற்கான  காரணங்கள்..
என் நேசத்தின் தன்மைகளை
மாற்றிக் கொள்ள முடிவதில்லை..
பூமியைப்போல..
===========
எந்த இரண்டு நாட்களும்
ஒன்றுபோல் இருப்பதில்லை..
ஒருநாள் என் அதீத நேசத்தையும் ..
மறுநாள் உன் பிடிவாதத்தையும் போல
இருப்பினும் நாட்கள் ஒன்றை விட்டு
ஒன்று பிரிவதில்லை..
நம்மைப் போல்.
============