கீற்றில் தேட...

 


பால்க‌னியில் பூத்திருந்த‌
பால் நிலா பொட்டு வைத்த‌
இரவுத்தாரகையைக் காட்டிக்காட்டி
குழந்தைக்கு சோறூட்டுகிறாள் தாய்...

செங்கல் காட்டுப்பாதைகளில்
தவறவிட்ட தாயைத்தேடும்
நாய்க்குட்டிகளின் பசிக்காய்
பாதிக்கவளம் நிலாச்சோற்றை
தவறவிடுகிறாள் மழலைத்தேவதை... 

 - ராம்ப்ரசாத் சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)